ஆகஸ்டு 16 – பிரதமர் துறையின் கீழ் இயங்கும் தேசிய ஒற்றுமை, சமூக மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் மற்றும் துணையமைச்சருடன் சமய புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான குழு (Jawatankuasa Mempromosikan Persefahaman Dan Keharmonian Di Antara Penganut Agama (JKMPKA) இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியது.
புத்ராஜெயாவில் நடந்த இந்த சந்திப்பில் துறையின் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கலந்து கொண்டார். இதில் JKMPKA-வின் உறுப்பினரும் மலேசிய இந்து சங்கத்தின் தேசிய தலைவருமான டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான்னும் கலந்து கொண்டார்.